கணவனை இழந்து,
தனிமையை மணந்து,
...
குழந்தையை பிரிந்து,
வெளிநாடு பறந்து,
கணவனை நினைத்து,
தலையணை நனைத்து,
மோகத்தில் தவித்து,
இரவில் வியர்த்து,
ஆசையை கரைத்து,
தலை முடி நரைத்து,
தெய்வத்தை துதித்து,
வேண்டுதலை பதித்து,
தொலைபேசியில் கதைத்து,
ஸ்கைப்பில் குழந்தை முகம் பார்த்து,
நெஞ்சத்தில் சேர்த்த முத்தத்தை,
கன்னத்தில் பதிக்க,
காலத்தை கரைத்து,
காத்திருக்கிறேன்...
நீயும் அப்படியே காத்திரு..
என் குட்டி கண்மணியே...